யாழ்.பல்கலைக்கழக மோதல்- தமிழ் – சிங்கள மாணவர்கள் 8 பேருக்கு எதிராக வழக்கு

309 0

jallasயாழ். பல்கலைக்கலைக்கழக மாணவர்களிடையே இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தமிழ் – சிங்கள மாணவர்கள் 8 பேருக்கு எதிராக யாழ். நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் 8 பேரையும் அடுத்த மாதம் 25 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு நீதிவான் சி. சதீஸ்கரன் நேற்று உத்தரவிட்டார்.

இரு தரப்பு மாணவர்களின் முறைப்பாடுகளுக்கு அமைவாக நான்கு தமிழ் மாணவர்கள் மற்றும் நான்கு சிங்கள மாணவர்களுக்கு எதிராக கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்துள்ள வழக்கில் இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.மோதலில் காயமடைந்து கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமையவே தமிழ் மாணவர்கள் நால்வருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சிங்கள் மாணவர்கள் நால்வருக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதற்கமைய அவர்களுக்கு எதிராகவும் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.ஏற்கனவே சிங்கள மாணவனின் முறைப்பாட்டுக்கு அமைய யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் அவர் நீதிமன்றில் ஆஜராகி பிணையில் விடுவிக்கப்பட்டள்ளார்.இந்த வழக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினமே குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஏனைய தமிழ் – சிங்கள் மாணவர்கள் 8 பேருக்கு மன்று அழைப்பாணை விடுத்திருப்பது குறிப்பித்தக்கது.