இந்தியா என்பது இலங்கை வரலாற்று காலத்தில் இருந்தே இலங்கைக்கு எதிரியாக இருக்கும் நாடு

372 0

இந்தியா என்பது இலங்கை வரலாற்று காலத்தில் இருந்தே இலங்கைக்கு எதிரியாக இருக்கும் நாடு என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

2 ஆயிரத்து 600 ஆண்டுகள் இந்தியா, இலங்கையை ஆக்கிரமித்த விதம், இலங்கை சுதந்திரத்திற்காக சண்டையிட்ட விதம் குறித்து மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்தியா வரலாற்று ரீதியான எதிரி என்பதால், மக்களின் அனுமதியை பெறாமல் இந்தியாவுடன் செய்து கொள்ளும் உடன்படிக்கைகளை அமுல்படுத்த இடமளிக்க போவதில்லை.சர்வதேச வெசாக் வைபவத்தில் பிரதம அதிதியாக பலந்து கொள்ள இந்தியா பிரதமர் நரேந்திர மோடி வருகின்றார் என்றதும் வெசாக் தோரணங்களை காண அவர் வருகிறார் என பலர் நினைத்தனர்.எனினும் உண்மையில் அவர் அதற்காக வரவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் தான சாலையில் சாப்பிட்டு விட்டு, இந்தியாவுக்கும் உணவை எடுத்துச் செல்லவே அவர் வருகிறார்.

இந்த தானம் சோறோ, ஜஸ்கிரீமோ, கோப்பியோ அல்ல. அது திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கியும் எக்டா உடன்படிக்கை என்பவாகும்.திருகோணமலை என்பது உலகில் உள்ள 10 இயற்கை துறைமுகங்களில் ஒன்று என்பதுடன் ஆசியாவில் முக்கியமான இயற்கை துறைமுகம்.இந்த துறைமுகத்தை கைப்பற்ற வரலாற்று காலம் தொட்டு, இந்தியா, போத்துக்கல், பிரான்ஸ், நெதர்லாந்து, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் போரிட்டுள்ளன.

பிரித்தானிய 1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிய போதிலும் திருகோணமலை துறைமுகத்தை அவர்கள் வைத்துக்கொண்டனர். 1957 ஆம் ஆண்டு பிரதமர் பண்டாரநாயக்கவே அந்த துறைமுகத்தை இலங்கைக்கு திரும்ப பெற்றுக்கொடுத்தார்.

இந்த துறைமுகத்தை உலக வல்லரசாக உருவாக கனவு காணும் இந்தியாவுக்கு வழங்குவது என்பது நரியிடம் கோழியை ஒப்படைப்பது போன்றது எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.