மட்டக்களப்பு சிறைச்சாலையில், இன்று புதுவருட கலை, கலாசார நிகழ்வுகள் (காணொளி)

458 0

சித்திரை  புதுவருடத்தை முன்னிட்டு  கலை, கலாசார விளையாட்டு நிகழ்வுகள்   இன்று  மட்டக்களப்பு சிறைச்சாலையில் நடாத்தப்பட்டன.

இலங்கை சிறைக்கைதிகளின் நலன்புரிச் சங்கம் மற்றும் இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

சிறைச்சாலை பிரதம ஜெயிலர் என்.பிரபாகரனின் ஒழுங்கமைப்பில் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.எம்.யு.எச்.அக்பர் தலைமையில் சித்திரை புதுவருட கலை, கலாசார விளையாட்டு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.

சித்திரை புதுவருட விளையாட்டு நிகழ்வாக, தலையணை சமர், முட்டி உடைத்தல், தேங்காய் திருவுதல், வினோத உடை என பல கலாசார விளையாட்டு நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதம புனர்வாழ்வு உத்தியோகத்தர் விக்கிரமசிங்க, சிறைக்கைதிகளின் நலன்புரிச் சங்க தலைவர் என் பி.ரஞ்சன், செயலாளர் வி.பிரதீபன், வைத்தியர் கருணாகரன், சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்களான, எஸ்.தினேஸ், பி.சுசிதரன், எல்.ஜெயசுதாகரன், பி.ஜி.டேவிட், சிறைச்சாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.