அனுமதிபத்திரம் இன்றி மண் வெட்டிய மூன்று பேர், கைது

225 0

ஹட்டன் – டிக்கோயா – தரவலை பிரதேசத்தில், அனுமதிபத்திரம் இன்றி பெக்கோ இயந்திரம் கொண்டு மண் வெட்டிய மூன்று பேர், கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த பெக்கோ இயந்திரமும் மண்ணைக் கொண்டுச் செல்ல பயன்படுத்திய இரண்டு பாரவூர்திகளும் நல்லத்தண்ணி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்த்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக நடவடிக்கைகளின் பொருட்டு ஹட்டன் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.