சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரட்டுகளுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பெண் இந்தியாவிலிருந்து நேற்றைய தினம் மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பெண்ணின் பயணப் பொதியிலிருந்து 6,000 சிகரட்டுகள் அடங்கிய 30 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

