மீதொட்டமுல்ல சர்ச்சை தொடர்பில் மற்றுமொரு கலந்துரையாடல்

222 0

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மற்றுமொரு கூட்டம் நடைபெறவுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இன்று முற்பகல் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நிதி அமைச்சு, கொழும்பு நகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பு மாவட்ட செயலகம் உள்ளிட்டவற்றில் கடமையாற்றும் உயர் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

மீதொட்டமுல்ல குப்பை மேட்டின் ஒரு பகுதி சரிந்து வீழ்ந்தமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற நிவாரண உதவிகளின் முன்னேற்றம் தொடர்பில் இன்று சந்திப்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.