நுவரெலியா மஸ்கெலியாவில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலி(காணொளி)

255 0

மஸ்கெலியாவிலிருந்து சாமிமலை நோக்கிப் சென்ற தனியார் பஸ்ஸில் பயணித்த குறித்த வயோதியப் பெண் பஸ்ஸிலிருந்து இறங்கிய போது எதிர்பாராத விதமாக பஸ்ஸின் முன் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சாமிமலை – ஸ்டர்ஸ்பி தோட்டத்தைச் சேர்ந்த 68 வயதுடைய முத்தையா அமரஜோதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தை அடுத்து ஆத்திரமுற்ற பிரதேச மக்கள் கற்களை எரிந்து பஸ்ஸை சேதப்படுத்தினர்.

சம்பவ இடத்திற்கு சென்ற மஸ்கெலிய பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதியை கைது செய்தனர்.