கொக்குத் தொடுவாய் பகுதியில் அமைக்கப்படும் விகாரையின் காணி உரிமையாளரினால் வழக்குத் தாக்கல்

348 0

1652033898courtsமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத் தொடுவாய் பகுதியில் அமைக்கப்படும் விகாரையின் காணி உரிமையாளரினால்   நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய்ப் பகுதியில் அமைக்கப்படும் விகாரையானது தனியாருக்குச் சொந்தமான காணியில் காணி உரிமையாளரின் அனுமதியின்றி அமைக்கப்படும் சூழலில் இக் காணியின் உரிமையாளர் பல முறை பலவழிகளிலும் முயன்றும் சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்படுகின்றது.
இவ்வாறு  விகாரை அமைக்கப்படும் நிலத்தின் உரிமையாளர் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து குறித்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளனர்.
இதன் பிரகாரம் இந்த விகாரை அமைக்கும் விகாராதிபதிக்கும் அதற்காக குறித்த காணியினை வழங்கியதாக கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளருக்கும் எதிராக வழக்கு தாக்கல்செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.