சர்வதேச கப்பற்துறையினருக்கான மாநாடு இலங்கையில்

386 0

800x480_IMAGE49363738சர்வதேச கப்பற்துறையினருக்கு இடையிலான மாநாடு ஒன்று இலங்கையில் நடைபெறவுள்ளது.

கொழும்பில் நாளையும் நாளை மறுதினமும் இந்த மாநாடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ஆசிய, ஆபிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த கப்பற்துறையினர் சந்திக்கவுள்ளனர்.

அத்துடன் வான்வழி சரக்கு பரிமாற்ற சேவையில் ஈடுபடுகின்றவர்களும் இதில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை துறைமுக அதிகார சபை இதற்கான ஏற்பாட்டை மெற்கொண்டுள்ளது.