SAITM கல்லூரி பங்குச் சந்தை பட்டியலில்

300 0

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை கொழும்பு பங்குச்சந்தையின் கீழ் பட்டியல் படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சைட்டம் நிறுவனம் தனியார் நிறுவனத்திலிருந்து இடை நிறுத்தி அரச கட்டுப்பாட்டு சபை மூலம் கண்காணிக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதம அதிகாரிகளை இன்று முற்பகல் சந்தித்து கருத்து வௌியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.