கட்டுநாயக்க விமான நிலையம் 3 மாதத்திற்கு முடப்படவுள்ளது.

324 0

Katunayake-image-1கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 5ம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு பகல் பொழுதில் மூடப்படவுள்ளது.

சிவில் விமான சேவைகள் அதிகார சபை இதனைத் தெரிவித்துள்ளது.

விமான ஓடுபாதை சீரமைப்பு நடவடிக்கைகளுக்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக நாளாந்தம் எட்டு மணித்தியாலங்கள் விமான நிலையம் மூடப்பட்டிருக்கும்.

இதன்படி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையில் இந்த விமான நிலையம் மூடப்படும் என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.