எந்தவொரு தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கும் நாம் தயார் – கயந்த கருணாதிலக்க

248 0

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினத்திற்கு இலட்ச கணக்கான மக்களை கொழும்புக்கு அழைத்து வருவோம். இம்முறை மே தின கூட்டம் தேர்தலுக்கான பலப்பரீட்சையாகும். எந்தவொரு தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கும் நாம் தயாராக உள்ளோம். கூட்டு எதிரணியினர் அலரி மாளிகையை முற்றுகையிடுவதாக கூறியுள்ளனர். முடியுமானால் அலரிமாளிகையை முற்றுகையிட்டு காண்பியுங்கள் என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க சவால் விடுத்தார்.

மே தின கூட்டம் தொடர்பில் வினவிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு கேசரிக்கு தெரிவித்தார்.