புதிய அரசியற் கட்சிகளுக்கான பதிவு ஆரம்பம்

234 0

புதிய அரசியற் கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பித்திருந்த கட்சிகளுக்கான நேர்முகத்தேர்வுகள் நாளை மறுநாள் முதல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நேர்முகத்தேர்வினூடாக அங்கிகரிக்கப்படும் அரசியற்கட்சிகள் தொடர்பான பட்டியலை விரைவில் வெளியிடுவதற்கும் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசியற்கட்சிகளை பதிவது தொடர்பில் ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே தேர்தல்கள் ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.