மஸ்கெலியாவில் தனியார் பேருந்தில் சிக்கி பெண்ணொருவர் பலி

225 0

சாமிமலையில் இருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று நண்பகல் 12.30 மணியளவில் மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்துள்ளவர் சாமிமலை – ஸ்டெஸ்பி தோட்டத்தை சேர்ந்த முத்தையா அமரஜோதி என்ற 60 வயதான பெண்ணொருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாமிமலை நகரில் இருந்து தனது வீடு நோக்கி செல்ல பேருந்தில் பயணித்த குறித்த பெண், பேருந்தை விட்டு கீழே இறங்கி பாதையை கடக்க முற்பட்ட போது, பேருந்து முன்னோக்கி பயணித்துள்ள நிலையில், அந்த பேருந்தின் முன் சில்லில் சிக்கி அந்த பெண் உயிரிழந்துள்ளதாக மஸ்கெலிய காவற்துறை தெரிவித்துள்ளது.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மஸ்கெலிய காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.