தலதா அத்துகோரவலவின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளது

95 0

தலதா அதுகோரல பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

இரத்தினபுரி தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல 2024 ஓகஸ்ட் 21ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதால் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(1) ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.