ஹட்டனில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர் (காணொளி)

254 0

ஹட்டன் குடாஓயா தோட்டத்தில்; இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய மணிவேல் புஸ்பராஜ் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் குடாஒயா தோட்டத்தில் இடம்பெற்ற வருடாந்த கோவில் திருவிழாவின் இறுதிநாளான மஞ்சல் நீராட்டு விழா இடம்பெற்ற வேளையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வரும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ள ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.