கொதிகமுவயிலிருந்து துனகஹ நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றும் திவுலப்பிட்டியில் இருந்து நீர்கொழும்பு நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதுடன் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த பெண் கொதிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

