எண்ணெய் விநியோகத்தை முழுமையாக இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கை

284 0
திருகோணமலை எண்ணெய் களஞ்சிய வளாகத்தை இந்தியாவுக்கு எந்த நிபந்தனைகளும் இல்லாமல் கையளிக்கும் திட்டம் ஒன்று இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இது தொடர்பான உடன்படிக்கை எதிர்வரும் 28ம் திகதி கைச்சாத்தாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த உடன்படிக்கை கைச்சாத்தாகும் பட்சத்தில், எண்ணெய் விநியோகத்தை முழுமையாக இடைநிறுத்தவிருப்பதாகவும் அந்த சங்கம் எச்சரித்துள்ளது.