இலங்கை கடற்படையிடம் இருந்து மீட்கப்பட்ட 18 மீனவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் உதவி

233 0

இலங்கை கடற்படையிடம் இருந்து மீட்கப்பட்ட18 மீனவர்களுக்கு நிவாரணஉதவித் தொகையாக தலா ரூ.5 லட்சத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்ப தாவது:-

தமிழக அரசு மேற் கொண்ட இடைவிடாத மற்றும் தொடர் நடவடிக்கைகளின் பயனாக தமிழக மீனவர்களின் 80 மீன் பிடி படகுகளும் விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட 80 படகுகளில் குறைந்தளவு சேதமடைந்த 64 படகுகள் மீட்பு குழுக்களால் பழுது நீக்கப்பட்டு தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டன.

மேற்படி மீட்புப்பணிக்கு சென்ற படகுகள் மற்றும் மீட்கப்பட்டுள்ள படகுகளுக்கு தேவையான எரியெண்ணெய், உயவு எண்ணெய் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது. மீட்புக்குழுவில் சென்ற மீனவர்களுக்கான உணவு மற்றும் படகு பழுது நீக்க செலவினம் ஆகியவற்றையும் தமிழக அரசே ஏற்றுக் கொண்டது. இலங்கையின் தலைமன்னார், காங்கேசன் துறை மற்றும் தலைமன்னார் பகுதியில்இருந்த 18 படகுகள் முற்றிலுமாக சேதமடைந்து, இலங்கைகடற்பரப்பில் மூழ்கிவிட்டன.

இவ்வாறாக இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு ஆளாகி, மீட்க இயலாவண்ணம் கடலில் மூழ்கிய இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 படகுகளை இழந்த 18 மீனவ குடும்பங்களின் வாழ் வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டமையால், அம்மீனவர்களின் துயரத்தினை போக்கிடும் வகையில், அவர்களுக்கு நிவாரணஉதவித் தொகையாகதலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.90 இலட்சம் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டார்.

இன்று தலைமைச் செயலகத்தில் அதற்கான காசோலைகளை 18 மீனவ பயனாளிகளுக்கு முதலமைச்சர் நேரில் வழங்கினார்.நிகழ்ச்சியில் மணிகண்டன், நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, தலைமைச் செயலாளர் கிரிஜாவைத்தியநாதன், கால்நடைபராமரிப்பு, மற்றும் அரசுஉயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.