மர்மமான முறையில் உயிரிழந்த யானை ; முள்ளியவளையில் சம்பவம் !

100 0

முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐங்கன்குளம் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (02) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு  ஐங்கன்குளம் பகுதியில்  யானையின் சடலம்  இருப்பதாக விவசாயிகள் அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்தே குறித்த யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த யானையின் இறப்புக்கான  காரணம்  இதுவரை தெரியவவில்லை.

யானையின் இறப்பு தொடர்பில்,  வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த யானையின் மரணம் தொடர்பான காரணத்தை மருத்துவ பரிசோதனையின் பின்னரே அறிய முடியும் என தெரிவித்துள்ளனர்.