பகிடிவதை – களனி பல்கலை மாணவர்களுக்கு பிணை

340 0

kaelnni_srsviyபகிடிவதை  குற்றச்சாட்டின்பேரில்  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த களனி பல்கலைக்கழகத்தின் 8 மாணவ மாணவிகள் இன்று சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
கம்பஹா மேல்நீதிமன்றம் இந்த பிணை அனுமதியை வழங்கியது
இவர்கள் கடந்த 75 நாட்களாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில் ஒருவருக்கு 2 லட்சம் ரூபா பெறுமதி என்ற அடிப்படையில். சரீரப்பிணையில் செல்ல இன்று அனுமதிக்கப்பட்டனர்.
பிணை அனுமதிப்பெற்றவர்களில் 3 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.