கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்பித்திமுகலான, தேவானந்த மாவத்தை பகுதியில் நேற்று (21) சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் எந்தவித தகவல்களும் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமானது அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சடலமானது பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

