மஹிந்தவின் பாதையாத்திரையில் பங்குகொள்வதில்லை – டியு குணசேகர

404 0

DEW-Gunasekeraமஹிந்த ஆதரவாளர்களால் நடத்தப்படவுள்ள மக்கள் பேரணியில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று, இலங்கை கமியுனிசக் கட்சி அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கட்சியின்  பொது செயலாளர் டியு குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த பாதையாத்திரையின் மூலம் ஒரு எதிர்ப்பை வெளிப்படுத்தலாம் என்று தோன்றவில்லை என்ற காரணத்தினாலேயே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் புதிய அரசியல் அமைப்பின் பொருட்டு இலங்கை கமயுனிஸ்ட் கட்;சி பாரிய பங்களிப்பை செய்யும் எனவும் அந்த அறிக்கையில், டியு குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போதைய அனைத்து அரசில் நிலைமைகள் குறித்த ஆராய்ந்த பின்னரே இந்த பாதையாத்திரையில் பங்குகொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.