தர்மலிங்கம் பிரதாபனின் சைக்கிள் பயணம் நேற்று இரவு திருகோணமலையை சென்றடைந்தது(காணொளி)

256 0

இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகள் அனைவருக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

தர்மலிங்கம் பிரதாபனின் சைக்கிள் பயணம் நேற்று இரவு திருகோணமலையை சென்றடைந்தது.

அவரை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை திருகோணமலை பேரூந்து நிலையத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த தர்மலிங்கம் பிரதாபன், மேற்கத்தேய நாடுகளில் இருப்பது போன்று அனைத்து முதியவர்களுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கும் சட்டம் இருந்தால் முதியவர்கள் தங்களுடைய எதிர்காலத்தில் நிம்மதியாக வாழக்கூடியதாக இருக்கும் எனவும் இதனால் அரசாங்கத்திற்கு பொருளாதார பிரச்சனைகள் எற்படாது என தெரிவித்தார்.

இன்றையதினம் திருகோணமலை பேரூந்து நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி தர்மலிங்கம் பிரதாபன் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.