வவுனியாவில் கிணறு ஒன்றில் விழுந்த நான்கு யானைகள் மீட்பு (காணொளி)

317 0

வவுனியா ஓமந்தை கொம்புவைத்த குளத்தில் கிணற்றில் வீழ்ந்து கிடந்த இரண்டு யானைகள் இன்று காலை மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட யானைகளில் ஒன்று அங்கு நின்றவர்களை தாக்க முற்பட்டபோது வனத்துறை அதிகாரியினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது.

ஓமந்தை கொம்புவைத்த குளத்தில் நேற்றைய தினம் இரண்டு குட்டி யானைகளும் இரண்டு பெரிய யானைகளும் கிணற்றினுள் வீழ்ந்திருந்த நிலையில், நான்கு யானைகள் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக வவுனியா ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வன விலங்கு ஜீவரசிகள் அதிகாரிகளுக்கு தகவலை வழங்கியுள்ளனர்.

மாலை 4.00 மணியாகியும் வன விலங்கு ஜீவராசிகள் சழூகமளிக்காமையினால் பொதுமக்களின் உதவியுடன் ஓமந்தை பொலிஸார் சுமார் 5 மணித்தியாலங்களாக போராடி இரண்டு குட்டி யானைகளை மீட்டெடுத்தனர்.

இரவில் தொடர்ச்சியாக மீட்பு பணியினை தொடர முடியாமையினால் இன்று காலை இரு பெரிய யானைகளும் கிணற்றினுள் உயிருக்கு போராடிய நிலையில் பெக்கோ கனகரக வாகனத்தின் உதவியுடன் மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட யானைகளிலொன்று பெக்கோ கனகரக வாகனத்தை தாக்கியதுடன் அதில் இருந்தவர்களை தாக்க முற்பட்ட சமயம் வனத்துறை அதிகாரியினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றைய யானை காட்டிற்குள் விடப்பட்டுள்ளது.