கட்டுகஸ்தோட்டையில் ஆணொருவர் சடலமாக மீட்பு

116 0

கண்டியில் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகஸ்தோட்டை – மடவல வீதியில் மகாவலி கங்கைக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹதகல பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமானது கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.