சர்வதேச ரீதியாக அதிக வயதை கொண்ட பெண்மணி மரணம்

241 0

சர்வதேச ரீதியாக அதிக வயதை கொண்ட பெண்மணி இன்று மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1899 நொவம்பர் 29ஆம் திகதி இத்தாலியில் பிறந்த இம்மா மொரனோ தமது 117வது வயதில் காலமானார்.

ஆயிரத்து 800ஆண்டில் இறுதியாக பிறந்தவர் இவரே என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எட்டு பிள்ளைகளில் மூத்தவராக பிறந்த இவர், மூன்று நூற்றாண்டுகளில் இரண்டு உலக மகா யுத்தங்களை கண்டதுடன், 90 இற்கும் மேற்பட்ட இத்தாலிய அரச நிர்வாகத்தின் நடவடிக்கைகளை நேரடியாக அனுபவித்துள்ளார்.

நீண்ட காலமாக வாழ்வதற்கான காரணங்களில், கடந்த 90 ஆண்டுகளாக தினமும் மூன்று கோழிமுட்டைகளை உட்கொள்வதாக தெரிவித்திருந்தார்.