பட்டதாரிகளுக்கான நியமனங்களை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் – நசீர் அஹமட்

257 0

நீண்டகாலமாக போராடிவரும் பட்டதாரிகளை கிழக்கு மாகாணத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு உள்வாங்கும் நடவடிக்கையை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரினால் வெளியிடப்பட்ட புத்தாண்டு தினச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது கல்வியை முன்னெடுத்து, வீதியில் இறங்கி தொழில் வாய்ப்புக்களுக்காக நீண்ட நாட்களாகப் போராடி வருகின்றனர். குறித்த பட்டதாரிகள் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில், கிழக்கில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பான சகல ஆவணங்களையும் அரசாங்கத்திற்குக் கையளித்துள்ளேன்.

இந்நிலையில், பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் இனியும் காலந் தாழ்த்தாது துரிதகதியில் முன்னெடுக்க வேண்டும்” என முதலமைச்சர்  தெரிவித்துள்ளார்.