தம்புள்ளை – கொழும்பு வீதியில் பொஹொரன்வெவ பிரதேசத்தில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் பின்புறத்தில் கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று (13) வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது காரின் முற்பகுதி முற்றாகச் சேதமடைந்துள்ளது.



