வெளிநாட்டு கடன்கள் தொடர்பான அறிக்கை அடுத்த மாதம் நாடாளுமன்றில்

291 0

தற்போதைய அரசாங்கம் இதுவரை பெற்றுள்ள வெளிநாட்டு கடன்கள் தொடர்பான அறிக்கை அடுத்த மாதம் நாடாளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது.

நிதியமைச்சர் ரவீ கருணாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்களை திருப்பி செலுத்துவதற்காகவே 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் அதிகளவான கடன்கள் பெற்று கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பான முழுமையான தகவல்கள் அடங்கிய அறிக்கை அடுத்த மாதம் சமர்பிக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.