180 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதி

306 0

திடீர் விபத்துக்கள் காரணமாக 180 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று நள்ளிரவு 12 மணி வரையான 24 மணித்தியாலங்களுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

இவர்கள் பட்டாசு விபத்து, வாகன விபத்து மற்றும் வேறு விபத்துக்களில் காயமடைந்தவர்கள் அடங்குவதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது திடீர் விபத்துக்கள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது