பன்னலவில் இரண்டு பேர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை

258 0
பன்னல பொலி;ஸ் பிரிவில் உள்ள போகஹ ஜனபதய, எலிபி;ச்சிய பிரதேசத்தில் இரண்டு பேர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு (13) 10.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பாரதூரமடைந்தமையே கைகலப்புக்கு காரணம் என ஆரம்ப விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. சம்பவத்தில் 30 மற்றும் 32 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண்கள் பலியானமை குறிப்பிடத்தக்கது.