மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

110 0

ஹினிதும, கும்புரேகொட பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹினிதும பொலிஸார் தெரிவித்தனர்.

ஹினிதும, கும்புரேகொட, ஹபரகடை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர், தனது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் அயல் வீட்டிலிருந்து மின்சார இணைப்பைப் பெற்றுக் கொள்ளுவதற்காக அங்குச் சென்றிருந்த போது இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து காயமடைந்தவர் மெதகம வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் இவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹினிதும பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.