முச்சக்கரவண்டி விபத்து

233 0

நுவரெலியாவிலிருந்து பத்தனை பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்ற முச்சக்கரவண்டிஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் சென்கிளயார் பகுதியில் குறித்த முச்சக்கரவண்டி பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று இரவு 7 மணியளவில் இவ்விபத்துநேர்ந்துள்ளதாக தலவாக்கலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் முச்சக்கரவண்டியினை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ் விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

முச்சக்கரவண்டியில் சாரதியும், ஏனைய இருவரும் பயணித்துள்ளதாகவும், மூவரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வீதி விபத்துகள் அதிகரித்துள்ளதன் காரணமாக வாகனங்களை வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செலுத்த வேண்டும் என பொலிஸார் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.