காலநிலை சீர்கேட்டால் பொகவந்தலாவயில் வீசிய பலத்த காற்றுடனான மழையினால் பல வீடுகள் தேசம்

95 0

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெம்பியன் தோட்டத்தின் 57பிரிவிலும் கெம்பியன் கீழ் பிரிவிலும் (22) ஆம் திகதி புதன்கிழமை இரவு பெய்த கடும் காற்றுடன் கூடிய வானிலையால் ஆறு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த குடியிருப்புகளில் உள்ள கூறைத்தகடுகள் வீசிய பலத்த காற்றுக்கு அள்ளுண்டு சென்றுள்ளது இதனால் ஆறு குடும்பங்களை சேர்ந்த 35பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு வீடுகளிலிருந்த சில பொருட்கள் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் மற்றும் தோட்ட முகாமைத்துவம் இணைந்து பாதிக்கப்பட்ட வீடுகளை சீர் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவளை, புதன்கிழமை (22) இரவு வீசிய பலத்த காற்றின் காரணமாக பொகவந்தலாவ மற்றும் இராணிகாடு வரையிலான பிரதான வீதிகளின் அருகாமையில் உள்ள மரங்கள் சரிந்து விழுந்துள்ளமையினால் பொகவந்தலாவ பிரதேசத்திற்கான மின்சாரம் விநியோகமும் முழுமையாக தடைப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கெசல்கமுவ ஒயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையால் கேசல்கமுவ ஒயாவின் அன்மையில் உள்ள குடியிருப்பாளர்களை அவமானமாக இருக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.