கிண்ணியா – பூவரசந்தீவு உப்பாறு காட்டுப்பகுதியில் ஒரு தொகை சட்டவிரோத மதுபானங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு 5 பெரல்கள் சட்டவிரோத மதுபானம் நேற்று கிண்ணியா காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது சுமார் 845 லீற்றர் கோடாவும் கைப்பற்றதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஒருவரும் இதுவரையில் கைது செய்யப்படாத போதிலும், கிண்ணியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.