யாழில்காய்ச்சலால் பீடிக்கப்பட்ட ஒருவர் உயிரிழப்பு

270 0
ஒருவார காலமாக காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் உரிய நேரத்தில் சரியான முறையில் சிகிச்சை வழங்கப்படாத காரணத்தால் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
அளவெட்டியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை தேவராசா (வயது 58) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார்.
இவர் கடந்த 5 ஆம் திகதி கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார். 6 ஆம் திகதி தெல்லிப்பளை வைத்திய சாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அஙகு  இரத்த பரிசோதனை எவையும் மேற்கொள்ளப்படாமல் மாத்திரை மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அவருக்கு காய்ச்சல் குறைவடையாது தொடர்பசியாக இருந்த காரணத்தால் கடந்த 8 ஆம் திகதி யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டுவரப்பட்டார். வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவந்த இவர் நேற்றைய தினம் காலை சகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குருதிக்கலன் குறைவடைந்து கிருமித்தொற்று ஏற்பட்டதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பிரேத பிரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மரண விசாரணையை யாழ் போதனா வைத்திய hலை மரண விசாரணை அதிரகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.