யாழ்.சங்கரத்தையில் கழுத்து வெட்டி குடும்;பஸ்தர் கொலை (படங்கள் இணைப்பு)

420 0

image2யாழ்ப்பாணம் – சங்காணை சங்கரத்தை வீதியில் உள்ள வயல் வெளியில் மர்மமான முறையில் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்ட குடும்பஸ்தர் ஒருவருடைய சடலத்தினை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
அராலி கிழக்குப் பகுதியினைச் சேர்ந்த செல்வராசா குணரத்தினம் (வயது 55) என்பவரே மேற்படிச் சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
குறித்த நபர் நேற்று காலை சங்காணை சந்தைக்குச் சென்று வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையே சங்கரத்தை வீதியில் உள்ள வயல் வெளியில் வைத்து இவர் வெட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் வீதியினை விட்டு விலகி அருகில் உள்ள வயல் வெளியில் தனது மேட்டார் சைக்கிலுக்கு மேலே உயிரிளந்த நிலையில் காணப்பட்டதால் அவரை துரத்தி வந்த சிலர் அவர் மீது தாக்குதல் நடத்தி கழுத்தில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
இருப்பினும் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் கொலைக்கான எந்த சான்றுப் பொருட்களும் மீட்கப்படவில்லை என்றும், உயிரிளந்த நபர் வசிக்கம் பகுதி, அவர் செய்யும் தொழில் தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இச் சம்பவத்தில் உயிரிளந்தவர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பிவைக்கும் தொழில் புரிபவர். இதனால் பணப்பிரச்சிகளும் உள்ளது. இது தொடர்பாக சிலருடன் பிரச்சினைகளும் பட்டுள்ளார்.
மேலும் அராலி பகுதியில் இளைஞர் ஒருவர் கிணற்றுக்கள் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இது தற்கொலைச் சம்பவமாகவே பதிவு செய்யப்பட்டிருந்து. அந்த இளைஞருடனும் இவருக்க முரண்பாடுகள் இருந்து.
இதனால் யாரும் பழிவாங்கும் எண்ணத்தில் இவரை கொலை செய்திருக்க கூடும் என்றும், சம்பவத்தில் நின்ற பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இவ்வாறான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும், மேலதிக விசாரணைகள் விரிவாக நடைபெறும் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

image1 image2