அமெரிக்க போர்க்கப்பல்களின் பிரவேசம் – வடகொரியா கடும் கண்டனம்

312 0

தமது கடற்பரப்பிற்குள் அமெரிக்க போர்க்கப்பல்களின் உட்பிரவேசத்தை அடுத்து வடகொரியா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

கொரிய குடா கடற்பரப்பிற்குள் அமெரிக்க போர்க்கப்பல்கள் உட்பிரவேசித்துள்ளது.

இது தமக்கு பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

எனவே பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு சக்திவாய்ந்த இராணுவபலம் பிரயோகிக்கப்படும் எனவும் வடகொரியா எச்சரித்துள்ளது.

இதேவேளை, வடகொரியா தொடர்ந்தும் ஏவுகணை சோதனைகள் நடத்தினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சீனாவும் தென்கொரியாவும் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.