நீர்கொழும்பில் யானைத் தந்தங்களுடன் இருவர் கைது!

14 0

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குற்பட்ட எத்துகால பகுதியில் யானைத் தந்தங்களுடன் இருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கணேமுல்ல மற்றும் தெவிநுவர ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 42 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 2 யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.