தேர்தலுக்குப் பின்னர் நாடு எதை நோக்கிச் செல்லும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் – மஹிந்த

19 0

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தீர்மானமிக்கது என்றும் தேர்தலுக்கு பின்னர் நாடு எதை நோக்கிச் செல்லும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் எமது வேட்பாளரே வெற்றிபெறுவார். ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்தார்.

கொழும்பு கெம்பல் பார்க்கில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.