புகையிரதம் நிறுத்த முன் ஏற முயன்ற இரு பெண்கள் படுகாயம் : கொழும்பில் சம்பவம்

16 0

கொழும்பில் இன்று பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்தில் ஏற முயன்ற இரண்டு பெண்கள் புகையிரதத்தின் இரண்டு பெட்டிகள் நடுவில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.

கண்டி நோக்கி பயணிப்பதற்காக புகையிரதம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு வந்துகொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவ்வேளை இரண்டு பெண்கள் புகையிரதத்ததில் ஏற முயன்று இரண்டு பெட்டிகள் நடுவில் சிக்குண்டுள்ளனர்.

உடனடியாக புகையிரதம் நிறுத்தப்பட்டு அவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றன .

மீட்கப்பட்ட இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.