காணாமல் போயுள்ள வர்த்தகரை தேடி மூன்று பொலிஸ் குழுக்கள்

231 0

காணாமல் போயுள்ள அநுராதபுரம் இபலோகம பிரதேச வர்த்தகரை தேடிக் கண்டுபிடிப்பதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

அநுராதபுரம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.பி. சந்துன்கஹவத்தவின் ஆலோசனைப்படி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 09ம் திகதி காலை முதல் இபலோகம, புஞ்சிகுளம் பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய ஒருவர் காணாமல் போயுள்ளதாக இபலோகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த நபரின் மனைவியினால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கடந்த 09ம் திகதி வீட்டிற்கு வந்திருந்த குழுவினருடன் பயணம் ஒன்று செல்வதாக கூறி அவர் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

அந்தக் குழுவினர், தனக்கு ஏற்கனவே அறிமுகமுள்ள பண்டாரவளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்று தனது கணவன் கூறியதாக பொலிஸ் முறைப்பாட்டில் மனைவி கூறியுள்ளார்.
அதன்படி இது கடத்தல் அல்ல என்றும் விருப்பத்துடனே அவர் அந்தக் குழுவினருடன் சென்றிருப்பதும் முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதென்று பொலிஸார் தெரிவித்தனர்.