பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும் 9 பேர் கைது!

13 0

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20 குழுவினரால் நாடளாவிய ரீதியில் நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது பாதாள உலக குழுக்களைச் சேர்ந்தவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாக சந்தேகிக்கப்படும் 25 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்  ஹங்வெல்ல , ரணால மற்றும் அங்கொடை  ஆகிய பகுதிகளைச் 39, 42, 39 மற்றும்  43 சேர்ந்த வயதுடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கப்புருகமுவ , வெலிகம மற்றும் தெலிஜ்ஜவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 31 ,26 மற்றும் 29 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வெல்லம்பிட்டிய மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 33 வயதுடைய இரண்டு  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த  மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக குற்றக் குழுக்களைச் சேர்ந்த 603 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.