பரீட்சைகள் திணைக்களத்தின் அனைத்து நடவடிக்கைகளும் டிஜிட்டல் மயப்படுத்தப்படவுள்ளன.
இதற்குத் தேவையான ஆறு மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடமொன்று திணைக்கள வளவில் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
50 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் இந்தப் புதிய கட்டிடம் நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கியுள்ளது.
பரீட்சை நடாத்துதல், விடைத்தாள் பரீட்சித்தல், பெறுபேறுகளை வெளியிடல், வினாத்தாள் தயாரிப்பு போன்ற நடவடிக்கைகளை விரைவாகவும் நம்பத்தகுந்த முறையில் மேற்கொள்வதற்கு இது துணை புரியுமென ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆகவே எதிர்காலத்தில் விடைத்தாள் திருத்துவதற்காக பாடசாலைகளைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது. பரீட்சைகளுக்காக இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.