கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள்

18 0

கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்களைக் கைது செய்வது தொடர்பில் பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.

இவர்கள் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி கற்பிட்டி பகுதியில் நபரொருவரை கடத்திச் சென்று 37 கிலோ நிறையுடைய தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் ஐவரும் மெனிக்கின்ன, காலி, புத்தளம் மற்றும் குன்னேபான ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் தங்களது பிரதேசங்களை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தப் புகைப்படங்களில் காணப்படும் சந்தேக நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் 071 859 1763 அல்லது 071 859 4916 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.