கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஜா-எல நுழைவாயிலில் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் கார் ஒன்று விபத்துக்குள்ளானது.
நெடுஞ்சாலையில் இருந்து ஜா -எல நோக்கி பயணித்த கார் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்து சுமார் 20 மீற்றர் தூரம் வரை புரண்டு சென்றுள்ளதாக சம்பவத்தை பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்விபத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
கடந்த காலங்களில் இந்த இடத்தில் வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பத்து பேர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.