இராட்டிங்கன் தமிழாலயத்தில் நடைபெற்ற அன்னைபூபதி அவர்களின் 36 ஆவது நினைவுவணக்க நிகழ்வு!

146 0

இந்திய அமைதிப்படைக்கு எதிராக உண்ணாநோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்துகொண்ட அன்னைபூபதி அவர்களின் 36ஆவது நினைவுவணக்க நிகழ்வு 20.04.2024 சனிக்கிழமை அன்று இராட்டிங்கன் தமிழாலயத்தில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. வணக்கநிகழ்வில் ஈகைச்சுடரினை தமிழாலய ஆசிரியை திருமதி. தனுஜா கோபிரமணன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து அன்னை பூபதி அவர்களுக்கான மலர்மாலையினை தமிழாலய மாணவிகளான செல்விகள்: அக்‌ஷஜா லிங்கோபன், பிரகதி பிரதீபன் ஆகியோர் அணிவித்தனர். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு, அனைவரும் சுடர், மலர்வணக்கம் செலுத்தினர்.