
திருமதி விஜயலக்ஷ்மி திரவியராஜா அவர்கள் மற்றும் திருமதி சாந்தி ரஞ்சித்த அவர்களுடைய கவிதை இடம்பெற்றது. ஆசிரியை சாமினி கண்ணன் அவர்களின் மாணவிகளுடைய நடனத்தினை தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு நியூற்றன் அவர்களின் உரை மற்றும் தேசப்பணியாளர் திரு ஆறுமுகம் அவர்கள் அன்னை பூபதி அவர்களின் தியாக வரலாற்றோடு சமகால அரியல் கருத்துரையையும் வழங்கி இருந்தார். நிகழ்வானது நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிவடிவில் ஒலிக்கப்பட்டு உறுதி மொழியோடு நிகழ்வானது நிறைவுற்றது.