சுகாதாரத்துறை சார்ந்த சவால்களை எதிர்கொள்ளத் தயார்

23 0

மாகாணத்தில் சுகாதாரத்துறையில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் சேவையாற்றும் சுகாதார துறைசார்ந்த உயர் அதிகாரிகளுக்கும்,  ஆளுநருக்கும் இடையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே இதனை தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சுகாதார சேவையை முன்னெடுப்பதில் மாவட்ட ரீதியில் காணப்படும் இடர்ப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளால் ஆளுநருக்கு எடுத்துக்கூறப்பட்டது.

சில பகுதிகளில் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாகவும், பௌதீக வளப் பற்றாக்குறை பாரிய சிக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து, நோயாளர்களின் உரிமைகளை பாதுகாத்து கரிசனையுடன் செயற்பட வேண்டிய பொறுப்பு சுகாதார அதிகாரிகளிடம் காணப்படுவதாகவும், கொள்கைகளை பின்பற்றி அதிகாரிகள் செயற்பட வேண்டும் எனவும் ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன் மத்திய அரசாங்கத்திடமிருந்து ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாகவும் ஆளுநர் கூறினார்.